விவிலிய மாதத்தின் நான்காம் ஞாயிறாகிய (22.09.2024) இன்று, திருச்சி மறைமாவட்ட கிறிஸ்தவ வாழ்வு பணிக்குழுவில் பயிற்சி பெற்ற, தன்னார்வ வேதியர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட நடமாடும் விவிலியக் கண்காட்சி பொன்மலைப் பங்கில் நடைபெற்றது.
காலை 9 மணி திருப்பலியானது நம் மறைமாவட்ட ஆயர் மேதகு. ச. ஆரோக்கியராஜ் அவர்களின் தலைமையில் விவிலிய ஞாயிறு திருப்பலியாக சிறப்பிக்கப்பட்டது.
அருகிலுள்ள அரங்கத்தில், விவிலியத்திலுள்ள பல்வேறு முக்கிய நிகழ்வுகள் தன்னார்வ வேதியர்களால் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. திருப்பலிக்குப் பின்பு, ஆயர் அவர்கள் இக்கண்காட்சியைத் திறந்துவைத்துப் பார்வையிட்டார்.
பெரியோர்கள், இளைஞர்கள், குழந்தைகள் என அனைவரும் கண்காட்சியை ஆர்வமுடன் கண்டுகளித்தனர்.
மறைக்கல்வி மாணவர்களுக்கு விவிலிய வினாடி வினா, விவிலிய விளையாட்டுகள், பொம்மலாட்டம் ஆகியவை நடைபெற்றன.
இதற்காக மிகவும் உழைத்த தன்னார்வ வேதியர்கள், நல் ஒத்துழைப்பும் ஆதரவும் நல்கிய பங்குத் தந்தை அருள்பணி. சேகர் செபாஸ்டின், உதவிப் பங்குத் தந்தை அருள்பணி. வில்சன் ஆகியோருக்கும், பங்கு மக்கள் அனைவருக்கும், சிறப்பாக ஆயர் மேதகு. ச. ஆரோக்கியராஜ் அவர்களுக்கும் எம் அன்பு கலந்த நன்றிகள்!
தோழமையில்,
அருள்பணி. சு. மரியசூசை, செயலர்,
கிறிஸ்தவ வாழ்வு பணிக்குழு,
திருச்சி.